கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 23, 2007

என்னுயிரே ஏன் கலக்கம்.

மாமன் அத்தை பரிகொடுத்தேன்
மனமயக்கத்தைக் கடை விரித்தேன்
பிஞ்சு மனதை காத்திருக்க
என் பூங்கவிதை நீ துணையிருக்க
மலர் மனதை திடப்படுத்தி – சில
மனிதர் கதை புரிந்து நின்றேன்.

வஞ்சகத்தை நம்பி நம்பி
நீ வாடுவதை விட்டுவிடு
என் மலர் வனத்தை வதங்கவிட்டு
வெறும் மனத்தை காவல் செய்தேன்
நீ திருஉள்ளத்தை உடையவிட்டு
தெருக் குளத்தை நம்பிடாதே.

கனிமரத்தை வெட்டவிட்டு
கலக்கமதை கடைவிரித்தேன்
தனிமரத்தைப் போலே – நீ
அங்கே தவிக்கும் கதை பிறரறியார்
உன் மனதை நான் அறிவேன்
உன் கருத்தை எழுதிவிடு.

ஆறுமனதை காவல் செய்ய – நான்
கூறும் கதை கொஞ்சமல்ல
கெட்ட கதை பேசுவோர்கள்
பிஞ்சு மனதை கெடுத்திடாமல்
அறிவு பெட்டகத்தை காத்திடுவாய்
நான் வரும் வரைக்கும்.

என் மனதை புரிந்த பின்னும்
இக்கவிதை படித்த பின்னும்
என்னுயிரே ஏன் கலக்கம்.

ஃஃஃ
எழுதியவர் :

marthandam-for-nila.jpg
ஃஃஃ

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 22, 2007

நேச உறவு பாரடா….

காட்டுக்குரங்கு தானடா கண்ணா
அதன் கருணை முகத்தை பாரடா
நேற்று வெளிவந்த கோழி குஞ்சிடம்
நேச உறவைப் பாரடா
குஞ்சு சுகமும் குரங்கு முகமும்
கூறும் கதைகள் ஏதடா
காட்டு மிருகம் தானடா கண்ணா
இவைகள் கற்று வந்த பள்ளி ஏதடா
நமக்கு படித்துத்தந்த பாடம் கேளடா
ஜந்தறிவு மிருகம் கூட பறவை குஞ்சை
அணைத்துக் காக்குதே கண்ணா – சில
ஆறறிவு மனித கூட்டம் வெறுத்து ஒதுக்குதே
கருணை உள்ளம் கொண்டதாலே
கருங்குரங்கும் கோழிக்குஞ்சும் கவிதையாகுதே கண்ணா
இந்த கருத்தை புரிந்தும் மனிதருக்கு பாசமில்லே
அன்புகொண்ட முகத்தைப் பாரடா
அவைகள் அணைத்திருக்கும் அழகைப் பாரடா கண்ணா.

ஃஃஃ

எழுதியவர் :

marthandam-for-nila.jpg

ஃஃஃ

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 22, 2007

அல்லல் படுவது ஏனடா….

அவனி வாழ்வில் மனித கூட்டம்
அல்லல் படுவது ஏனடா…

நீயும் நானும் உறவடா
நெஞ்சம் நிறைந்த பகையடா…

பல் தெரியும் சிரிப்படா
ஒரு பலன்தராத நிலையடா…

வாய் நிறைய இனிப்படா
வயிறு முட்டும் கசப்படா…

இருபதில் முருக்கம் அறுபதில் கிறக்கம்
இயற்கை தந்த வரமடா…

அன்பில்லாத வாழ்க்கை தேடி
அலுத்துவிட்ட ஓடடா…

வாழ்க்கை தேடி வரவு நாடி
வரண்டுவிட்ட கூடடா…

வரவு செலவு கணக்கு பார்த்தால்
ஒரு வகை சேராது வாழ்வடா…

இயற்கை எய்தி போனபின்னே
ஓர் எலும்பும் மிஞ்சாத நிலையடா
இன்றைய மனித வாழ்வடா !!!……

ஃஃஃ

எழுதியவர் :

marthandam-for-nila.jpg
ஃஃஃ

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 22, 2007

ஆவரையின் ஜோதியே…..முத்தாரம்மனே….4

ஆவரையின் ஜோதி
ஆன்னையவள் அருளாலே
சிந்தையிலே பூ மலரும்
சிறப்பாக ராஜபார்வை வரும்
நாவினிலே கலைச் செல்வி
நல்லகீதம் பாடவைப்பாள்
கலை ராணி அருளாலே
கற்பனைகள் பெருகி வரும்
வளர்மதி போல் வளர்ந்து
ஒருவண்ணப் பாடல் உருவாகும்
செவிக்கினிய அமுதாக
ஒரு சின்னப்பாடல் உருவாகும்
வண்ண நிற புஸ்பத்தால்
வடிவங்கொண்ட தங்க மாலையை
பத்தரை மாற்றுத் தங்கம் போல்
பாதுகாப்பேன் என்றுமே….

ஃஃஃ
எழுதியவர் :

marthandam-for-nila.jpg

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 21, 2007

ஆவரையின் ஜோதியே…..முத்தாரம்மனே….3

அச்சம் வேண்டாம்
அழிவு வேண்டாம்
அறிவைத்தாரும் தேவியே

கோபம் வேண்டாம்
கொடுமை வேண்டாம்
குணத்தைத் தாரும் தேவியே

பயமும் வேண்டாம்
பசப்பும் வேண்டாம்
நல்ல பலனைத் தாரும் தேவியே

களவு வேண்டாம்
சூது வேண்டாம்
கண்ணியமாய் வாழ்வதற்கு வழியைத்தாரும் தேவியே

நோயும் வேண்டாம்
நொடியும் வேண்டாம்
நோயில்லா வாழ்வு வேண்டும் தேவியே

கள்ளம் வேண்டாம்
கபடம் வேண்டாம்
கருணைநிறைந்த மனதைத்தாரும் தேவியே

உலகில் உள்ள
நன்மை எல்லாம்
உற்றறியும் திறமை தாரும் தேவியே

மெய்ஞானமும்
விஞ்ஞானமும்
கற்றுயர அறிவைத்தாரும் தேவியே

விருது பெற்ற
வீரத் தலைவன்
வழியறிந்து நடந்திட வகையைத்தாரும் தேவியே

பல கலையும் கற்க வேண்டும்
பாலர் எல்லாம் படிக்க வேண்டும்
பயிர்கள் நன்றாய் செழிக்க வேண்டும்
பருவகால மழையும் வேண்டும் தேவியே

விட்டபயிர்கள் விளைய வேண்டும்
வீடுதோறும் இன்பம் வேண்டும்
வீம்பில்லாத மனதைத் தாரும் தேவியே

பெரியோர்களை மதித்து நல்ல
பெற்றோர்களை பாதுகாக்கும்
பெருமை வேண்டும் தேவியே.

கல்வி வேண்டும் திறமை வேண்டும்
காளையற்கும் கற்பு வேண்டும்
கருணை கூர்ந்து காத்திடுவாய் தேவியே

காளையர்க்கும் கன்னியர்க்கும்
கற்பைக் காக்கும்
குலப்பண்பு வேண்டும் தேவியே…

அன்னை குலத்தை போற்றிக்காக்கும்
அகம் நிறைந்த
அறிவு வேண்டும் தேவியே..

காதல் வேண்டும் வீரம் வேண்டும்
இவைகள் வரம்பு மீராத
தெளிவு வேண்டும் தேவியே…

அழுதப் பிள்ளைப் பால்குடிக்கும் என்ற
அமைப்பைப் போல நாங்களும்
விரும்பும் நலம் பெறுவதற்கு
நல்ல விவரம் தாரும் தேவியே..
ஃஃஃ

எழுதியவர் :

marthandam-for-nila.jpg

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 21, 2007

ஆவரையின் ஜோதியே…..முத்தாரம்மனே….2

அன்பும் அறமும் பெருக வைக்கும் அருள் நிறைந்த தேவியே
ஆதிகாலத் தேவியே எங்கள் ஆவரையின் ஜோதியே
இன்னல் காத்து இனிமை சேர்க்கும்
ஈடில்லா ஜோதியே
உனது வீடு எங்கள் கோவில் உலகில் பெருமை பெற்றிட
ஊழி உள்ள காலம எல்லாம் ஊரும் கூடி வணங்குவோம்
எங்களுக்கும் உலகில் சிறந்த எல்லா நலமும் வேண்டுமே
ஏழை எங்கள் குறை மறந்து ஏற்றம் தாரும் தேவியே
ஐயப்பாட்டை போக்கியே ஐக்கியமாய் வாழவே
ஒற்றுமையாய் நாங்களும் ஒரு தீங்கும் அணுகாமல்
ஓங்கு புகழ் பெற்றிட ஓய்வு கொள்ளா மனதுடன்
உனது பாதம் போற்றுவோம் வேண்டும் வரம் தருவாய் தேவியே.

ஃஃஃ

எழுதியவர் :

marthandam-for-nila.jpg

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 21, 2007

ஆவரையின் ஜோதியே…..முத்தாரம்மனே….1

எங்கள் முன்னோர்கள் போற்றி வணங்கிய முத்தாரம்மனே
தாயறியாக் குழந்தையில்லை,
நீயறியா நிலைகளிலில்லையென்று
பலகலையும் கற்றுணர்ந்தவரும்
பாரினில் உனை வணங்கும் வண்ணம்
எல்லா நலன்களையும் எங்களுக்குத் தாருமம்மா
பாலுக்குள்ளே நெய்யைப்போலும்
சிப்பிக்குள்ளே முத்தைப்போலும்
கானலிலே ஊற்றைப் போலும்
எங்களுக்குள் நீயிருந்து இயக்கிடுவாய் தேவி.
ஃஃஃ

எழுதியவர் :

marthandam-for-nila.jpg

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | ஆகஸ்ட் 12, 2007

அறவழி நடந்தால் கேடேது?!…

உண்மையே உனது விலையேது
உன்னையே கேட்டேன் தயங்காது
ஏழைக்கு இசைந்த விருந்தேது
ஏழ்மையை அகற்ற மருந்தேது
உண்மை உழைப்பில் தயங்காது
உறுதி மனமே களைப்பேது
பொங்கும் குணங்கள் பொருந்தாது
பொறுமை இருந்தால் வருந்தாது
ஆணவம் குறைந்தால் அழிவேது
அன்பின் வழியே விடும்தூது
அண்டிக் கெடுப்பது ஆகாது
அறவழி நடந்தால் கேடேது
செத்தவர் திரும்பிய கதையேது
சாகாமல் நிலைக்கும் கதைஓது
திறந்த கூண்டுக்குள் கிளியேது
திங்களுக் கொருமுறை நிலவேது
அன்புக்கு நிகராய் இனிதேது
இந்ந ஆண்டியின் கூட்டில் கிளியேது
அதனிடம் பேச மொழியேது
அறிந்தவர் சொன்னால் பகையேது.

* * *

எழுதியவர் :

marthandam-for-nila.jpg

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | ஆகஸ்ட் 9, 2007

கனவெயிலும் கால்வெடிப்பும்…


கனவெயிலும் கால்வெடிப்பும் துன்பம் தரும் நேரம்
கண்ணுதிர்க்கும் நீரும் வெந்நீராய் மாறும் காலம்
துன்பமென்று மனம் வருந்தி கண்ணயரும் நேரம்
கனிமொழியாள் அருகில் வந்து கலகலப்பாய் கூறும்
கற்கண்டு தேன் தமிழில் கவிதையுள்ளம் மீறும்.
கடுங்குளிரும் கனவெயிலும் கடத்திவிடத் தோணும்
கற்பனையும் அற்புதமும் கலந்து உறவாடும்
கண்மணிகள் கிள்ளைமொழி காதில் வந்து மோதும்
கஷ்டமதை கண்கண்ட தோணியாக்கி கனகடலும் தாண்டும்.

* * *

எழுதியவர்:
மார்த்தாண்டம்.
Late. R. மார்த்தாண்டம்.

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | ஆகஸ்ட் 9, 2007

மயக்கம் தானோ?!…


நீங்காத நினைவு நெஞ்சத்தின் உறவு
நிலையற்ற வாழ்வு நிமிசத்தில் சாய்வு
நித்தம் தொடர்வு நீண்ட கனவு
ஏனிந்த இணைவு காரைகாணா வாழ்வு
கடந்திட அறிவு இறைதேடி விரைவு
ஏக்கமே உறவு மனைவி மக்கள் நலிவு
மயக்கமே உறவு மனம்கொண்டது துறவு
மயங்குது இரவு மதியற்றோர் வரவு
மாற்றலாம் துறவு மதிமுகததின் நினைவு
மயக்கம் தானோ மனித இசைவு.


marthandam.JPG

எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.

« புதிய இடுகைகள் - பழைய பதிவுகள் »

வகைகள்