நித்தம் பிறக்குது பூமேனி
நீச்சசெயலுக்கு தினம் நாணி
நிறையும் வாழ்வுக்கு வகைபேணி
நேர்மை பெருக்குவார் தவஞானி
குடும்ப மாந்தர்கள் மனம்கோணி
குமுற வைக்கிறார் திரைஞானி
அறவழி என்கிறார் கோமேனி
அஞ்ச வைக்கிறார் விஞ்ஞானி
ஆட்டிப் படைக்கிறார் சில அஞ்ஞானி
அகிலமெல்லாம் வாழ வகைபேணி
அலைந்து உருகுது பல திருமேனி
அன்னை திரேசாள் அருள் ராணி
அன்பாய் ஊறிடும் நற்கேணி.
பலனைத் தராத பல காணி
பரந்து கிடக்குது; அதைப் பேணி
பலனைப் பெறுபவரும் ஞானி
வண்ண கணவன் மக்கள் நலம்பேணி
வரம்பு மீறாத அன்புஅறம் பேணி
வாட்டம் தீர்க்கும் அன்பு குலவாணி
வீட்டுக்கு வீடு பால்மேனி
வீம்புச்செயலுக்கு மனம் நாணி
விடிவு கண்டிடத் தீர்மானி
வீரச்செயலுக்கு வழிகாணி.
ஃஃஃ