கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | டிசம்பர் 18, 2007

தெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்

அலகபாத்தில் அண்ணன்
அரேபியா ரியாத்தில் தந்தை
காணியாத்தில் தாத்தா
கவனத்தில் கருத்தாக இருந்து
கடவுளிடத்தில் கஷ்டத்தை விட்டு
ஆத்திரத்தில் அறிவு மாறாதே
நல் மனத்தில் நன்றி மறக்காதே
மொத்தத்தில் மிரண்டு நிற்காதே
நெஞ்சத்தில் நேர்மை மாறாதே
அச்சத்தில் அவலம் செய்யாதே
நெஞ்சத்தில் நேர்மை இருந்தால்
சஞ்சலத்தில் சாவை தேடமாட்டோம்
கொஞ்சத்தில் குணம் கெடமாட்டோம்
கோபத்தில் கொடுமை செய்யமாட்டோம்
பஞ்சத்தில் பாவம் செய்யமாட்டோம்
வஞ்சகத்தை வசை பாடுவோம்
நம் நெஞ்சத்தில் நேர்மை கண்டு
சூரிய வெளிச்சத்தில் பணியைப் போல
வேகத்தில் விலகி கஷ்டம் மாறும்
வையகத்தில் வாழும் வரை
பொய்யரத்தில் வீழ்ந்திடாமல்
மெய்யகத்தில் நேர்மையாக
தெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்.

ஃஃஃ


மறுவினைகள்

  1. இவ்வளவு நல்லவரா இந்த உலகத்தில இருக்க முடியுங்களா?
    சந்தேகத்துடன்
    கமலா

  2. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கமலா மேடம்.

    அப்பா இந்தக் கவிதையை எனக்காக 1980 வருடம் சவுதி அரேபியாவில் வைத்து எழுதி எனக்கு கடிதத்துடன் அனுப்பியது.

    அப்பாவின் கவிதைக்கு ஏற்ப முடிந்த அளவிற்கு வாழ்ந்து வருகின்றேன்.

    என்ன நிறைய சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. நமக்காக நமது குடும்பமும் சில கஷ்டங்களை தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

    முடிந்தால் தொடர்ந்து அப்பாவின் கவிதைகளை பார்த்து கருத்து கூறுவும்.


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்