தமிழ் மகள் எந்தன் கரம் பிடித்தாள்
தவ மகள் அன்பால் பிணைந்திருந்தாள்
பட்டிலும் பணத்திலும் மயங்கவில்லை
பண்பிலும் அன்பிலும் மயங்கி நின்றாள்
பொன்னிலும் பொருளிலும் ஏக்கமில்லை
பொட்டிலும் பூவிலும் இழைந்து வந்தாள்
மனக் கோட்டைகள் கட்டி கிறங்கவில்லை
குடிசை வாழ்விலே மனம் மகிழ்ந்தாள்
குண நலத்திலே மயங்கி வாழ்ந்தாள்
ஏழைகள் என்றால் வெறுக்கவில்லை
கண்டது கேட்டு வருத்த வில்லை
ஏற்றமுறை வாழ்வதை தடுக்காமல்
கண்ணிசைவு கண்டுமே இயங்கி வந்தாள்
சேட்டைகள் கண்டால் வெறுத்திடுவாள்
சேமங்கள் என்றால் மனம் மகிழ்வாள்
அந்த சேயிழையென்றும் என்னில் நிறைந்திருப்பாள்.
ஃஃஃ