கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 30, 2007

மௌனமே கவிதையாய்…

மல்லிகை மலர்கள் மலர்கின்றபோது
மனத்தை மயக்கும் மணம் எழும்போது
தென்றல் காற்று தழுவிடும் போது
தேன்துளிபோல் மழை சிதறிடும் போது
அழகிய மயிலொன்று ஆடிடும்போது
ஆசையாய் குயிலொன்று கூவிடும் போது
முழுநிலா வானிலே மகிழ்கின்ற போது
மௌனமே கவிதையாய் பொருள்தரும் போது
அழகியே! உன்னை நான் நினைத்துக்கொள்கின்றான்
அலைகின்ற நெஞ்சினை அடக்கப்பார்க்கின்றேன்
அடக்கும் முயற்சியில் தோல்வி காண்பதால்
விழிகள் உதிர்க்கின்ற வேதனைச் சரங்களை
மறக்காமல் அப்பாவிமகளுக்குச் சூட்டியே
நெஞ்சம் அழிகின்றேன்! அவள் வஞ்சம் நினைப்பதால்
எண்ணம் மறக்கிறேன்! எண்ணம் மட்டுமா?
என்னையும் மறக்கிறேன்.

ஃஃஃ
எழுதியவர் :

marthandam-for-nila.jpg
எழுதிய நாள் : மே-1980
இடம் : சவுதி அரேபியா.

ஃஃஃ


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்