ஆறுதரம் வெறுத்து நின்றாள் கலைமகள்
நூறுதரம் நினைத்து வந்தாள் திருமகள்
பேபி கிளாஸ் கடந்திருப்பாள் வளர்மகள்
என் பேரைச்சொல்லி தேடி நிற்பாள் இளம் மகள்
கட்சி கட்டி திரிந்த எங்கள் இளம்மகன்
எந்தன் கருத்தை கேட்டால் கல்வியிலே முதலவன்
அவன் கலைகள் பல கற்றுயர்வான் இனியவன்
நாட்டைக்காக்கும் பணிகள் செய்து
நலம் பெறுவான் தலைமகன்
வீட்டைக்காக்கும் உயர்வினிலே
பலன் பெறுவான் இளையவன்
நல்ல பிள்ளை பெற்றுக்காக்கும் எந்தன் நாயகி
நடைபிணமாய் அலைவதில் லாபமோ?!….
ஃஃஃ
எழுதியவர் :

எழுதிய நாள் : மே-1980
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ
supper kavithai
எழுதியவர் R.REGHU-BANGALORE. நாள் பெப்ரவரி 20, 2008
நேரம் 1:02 பிற்பகல்