நீங்காத நினைவு நெஞ்சத்தின் உறவு
நிலையற்ற வாழ்வு நிமிசத்தில் சாய்வு
நித்தம் தொடர்வு நீண்ட கனவு
ஏனிந்த இணைவு காரைகாணா வாழ்வு
கடந்திட அறிவு இறைதேடி விரைவு
ஏக்கமே உறவு மனைவி மக்கள் நலிவு
மயக்கமே உறவு மனம்கொண்டது துறவு
மயங்குது இரவு மதியற்றோர் வரவு
மாற்றலாம் துறவு மதிமுகததின் நினைவு
மயக்கம் தானோ மனித இசைவு.
எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.