புத்தாண்டே நில்லு
புனிதம் பெருக வழிசொல்லு
புண்படுத்துது பல்லு
பொருப்புணரச் சொல்லு
நலம்புரியும் படிச் சொல்லு
நடந்த துண்பம் தள்ளு
நாசச்செயல் வெல்லு
அதிகமில்லை நெல்லு
அரிசியிலே கல்லு
அனேகக் கியூவில் மல்லு
ஆட்சியாளர் வில்லு
அறிவாய்வளரச் சொல்லு
அவசியத்தை மெல்லு
அகந்தை திருந்தச் சொல்லு
ஆட்டம் போடுது பல்லு
காட்டம் சேர்க்குது சொல்லு
உழைத்து வாழச் சொல்லு
உதவாத் தனத்தைத் தள்ளு
புதுமைப் பெருகச் சொல்லு
ஏமாற்றும் நிலையைத் தள்ளு
இனியப் பண்பைச் சொல்லு
அன்பினிலே வெல்லு
புத்தாண்டே நில்லு
புகழ் நலனைச் சொல்லு
புரியும்படி சொல்லு.
ஃஃஃ
எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : 08.01.1985
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃPosted on:31.12.06