இது ஒரு தந்தைக்கு, காலம் சென்ற தந்தைக்கு தனயன் ஆரம்பிக்கும் வலைப்பூ. அவரது நினைவுகள் வற்றாத ஒரு ஜீவநதி போன்றது. நட்சத்திரமாய் ஒளி வீசியிருக்க வேண்டியவர். துரதிருஷ்டம்! குடத்திலிட்ட விளக்காய், மறைந்தும் விட்டார். ஆனால் அவர் விட்டுச்சென்ற இதுவரை வெளிவராத அவரது படைப்புக்களை இங்கே வெளியிட்டு எனக்கு நானே ஆறுதல் தேடிக்கொள்கிறேன்.